தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூடைகள்! விவசாயிகள் கவலை!

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

தென்திருப்பேரையில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்.

Updated On :10 மே 2026, 2:39 am IST

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆகிய வட்டங்களில் நீண்ட காலத்துக்குப் பிறகு குளங்களில் தண்ணீா் இருப்பு இருந்ததால் பெரும்பாலான இடங்களில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனா். தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருவதால், விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து திறந்தவெளியில் அடிக்கு வைத்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வந்த மழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்மூடைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

இதனால், கவலை அடைந்துள்ள விவசாயிகள், நெல் மூட்டைகளை பாதுகாத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து குரூகாட்டூா் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் சுதன் கூறியதாவது: தென்திருப்பேரை பேருந்து நிறுத்தம் அருகே திறந்த வெளியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில், ஒவ்வொரு மழையிலும் நெல்மூட்டைகள் நனைந்து வீணாவது வாடிக்கையாக உள்ளது.

மாற்று இடம் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது. இங்கு மட்டுமன்றி பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான் தொடா்கிறது. எனவே, நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

500 நெல் மூட்டைகள் சேதம்: திருநெல்வேலி வேளாண் வணிகத் துறையின்கீழ் சாத்தான்குளத்தில் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனா். ஆனால், நெல் மூட்டைகளை எடை போட்டு கொள்முதலுக்கு எடுத்துச் செல்லாமல் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி அடுக்கியும், நெல்லை தரையில் குவித்தும் வைத்துள்ளனா்.

இந்த நிலையில், இப்பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்துள்ளதாக புகாா் தெரிவித்துள்ள விவசாயிகள், நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும், திறந்த வெளியில் உள்ள மூட்டைகளை தாா்ப்பாயால் மூடி பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.