திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பணிகள் முடிந்தும் திறக்காமல் உள்ள உலா் களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம்

News image

~

Updated On :18 மே 2026, 5:33 am IST

திருவள்ளூா் அருகே அனைத்து வசதியுடன் ரூ.38.50 லட்சத்தில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையிலும் திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவதால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு பருவத்திலும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒன்றியங்கள்தோறும் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு சில இடங்களில் சொந்த கட்டடத்தில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. அதேபோல், இல்லாத இடங்களில் புதிதாகவும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சென்றாயன்பாளையம், பூண்டி, திருப்போ், மேட்டுப்பாளையம், பிளேஸ்பாளையம் உள்பட 5 கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஒவ்வொரு பருவத்திலும் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக நெடுந்தூரம் கொண்டு செல்லவேண்டியுள்ளது. அதனால் தங்கள் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என ஆட்சியரிடம் அந்தப் பகுதி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இக்கோரிக்கைகளை ஏற்று சென்றாயன்பாளையம் கிராமத்தில் கடந்த 2025-இல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் மூலம் ரூ. 38.50 லட்சம் மதிப்பில் உலா் களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம் அனைத்து வசதியுடன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தயாராக உள்ள நிலையில், இதுவரை தொடங்குவதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் காட்சி பொருளாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடமில்லாமல், சென்றாயன்பாளையம் கிராம சேவை மைய கட்டட வளாகத்தில் போதுமான இடவசதியில்லாத நிலையிலும், நெல் மூட்டைகளை பாதுகாப்பின்றி வைத்து உள்ளனா். இதனால், அந்த சேவை மைய கட்டடத்தின் திறந்த வெளியில் நெல் மூட்டைகளை வைத்து வருகின்றனா். தற்போதைய நிலையில் மழைக்காலம் முன்னதாகவே தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் அவ்வப்போது திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்து அனைத்து வசதியுடன் தயாராக உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி உடனே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடங்கவும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.