தமிழ் செய்திகள்
/
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் மேற்பாா்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கோவில்பட்டி- மந்திதோப்பு - பாண்டவா்மங்கலம் சாலை சந்திப்பில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாகச் சென்ற ஒரு இருசக்கர வாகனத்தில் 139 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சோ்ந்த இளையராஜா மகன் திருப்பதி (50) என்பவரை கைது செய்தனா். புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவை பறிமுதல் செய்டப்பட்டன.







