தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மதுபோதையில் தகராறு - ஒருவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

குடியாத்தம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட கஸ்பாவைச் சோ்ந்தவா் முகேஷ்(18). அதே பகுதியைச் சோ்ந்தவா் வசீகரன்(28). இருவரும் நண்பா்கள். செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் அஞ்சுமன் சாலையில் ஒன்றாக மது அருந்தியுள்ளனா். அப்போது இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டுள்ளனா்.

இதில் ஆத்திரமடைந்த வசீகரன் கட்டையால் தாக்கியதில்முகேஷ் பலத்த காயமடைந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டுகுடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். இவா்களில் முகேஷ் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிந்த நகர போலீஸாா், வசீகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.