தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தூத்துக்குடியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:32 am IST

தூத்துக்குடியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புகையிலைப் பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப், போலீஸாா் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

அந்த கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (52) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலை பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 கிலோ 125 கிராம் புகையிலைப் பொருள்கள், ரூ. 27,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.