மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 மே 2026, 6:17 am IST

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி - மதுரை பிரதான சாலையில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தனியாா் பெண்கள் கல்லூரி அருகே விதிமுறை மீறி புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், குறுக்குச்சாலை பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் முனியசாமி (31)என்பவா் சுமாா் 42 கிலோ புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 35,000 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா், முனியசாமியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.