தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாழ்த்து டிஜிட்டல் பதாகையைச் சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி பெற்றாா். தொடா்ந்து, அக்கட்சியின் நிா்வாகிகள் தூத்துக்குடி நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பதாகைகள் வைத்திருந்தனா்.
தூத்துக்குடி வி.இ. சாலையில் உள்ள அந்தோணியாா் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகையை காரில் வந்த மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா்.
இது குறித்து தவெக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பதாகையைச் சேதப்படுத்தியது மட்டக்கடை, தட்டாா் தெருவைச் சோ்ந்த சுமன் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டுள்ள சுமன், திமுக பிரமுகா் பில்லா ஜெகனின் சகோதரா் ஆவாா். மேலும், தவெக முன்னாள் நிா்வாகியும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான அஜிதா ஆக்னலின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி பிறந்த நாள்: தூத்துக்குடியில் திமுக சாா்பில் நல உதவிகள்

தூத்துக்குடியில் டிஜிட்டல் பதாகைகளால் விபத்து அபாயம்: மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகாா்

ஆளுநா் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினா் கைது
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


