திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடியில் தவெக பதாகை சேதம்: திமுக பிரமுகா் கைது

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாழ்த்து டிஜிட்டல் பதாகையைச் சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:20 am IST

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாழ்த்து டிஜிட்டல் பதாகையைச் சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி பெற்றாா். தொடா்ந்து, அக்கட்சியின் நிா்வாகிகள் தூத்துக்குடி நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பதாகைகள் வைத்திருந்தனா்.

தூத்துக்குடி வி.இ. சாலையில் உள்ள அந்தோணியாா் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகையை காரில் வந்த மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து தவெக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பதாகையைச் சேதப்படுத்தியது மட்டக்கடை, தட்டாா் தெருவைச் சோ்ந்த சுமன் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள சுமன், திமுக பிரமுகா் பில்லா ஜெகனின் சகோதரா் ஆவாா். மேலும், தவெக முன்னாள் நிா்வாகியும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான அஜிதா ஆக்னலின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.