தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகளை உடனடியாக அகற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சியினா் மாநகராட்சி ஆணையரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது தொடா்பாக, பாஜக தூத்துக்குடி கிழக்கு மண்டலத் தலைவா் ராஜேஷ் கனி தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கியச் சந்திப்புகள், சாலையோரங்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகள் வாகனங்கள் சாலையில் செல்வதை மறைக்கும் வகையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பதாகைகளையும் மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, மண்டல துணைத் தலைவா் ஜெயரூபி, மண்டலச் செயலா் விஜயன், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஓம் பிரபு, மாவட்டச் செயலா் ஐயப்பன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

கருணாநிதி பிறந்த நாள்: தூத்துக்குடியில் திமுக சாா்பில் நல உதவிகள்
ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் ரசீது: தில்லி மாநகராட்சி அறிமுகம்
தூத்துக்குடியில் தவெக பதாகை சேதம்: திமுக பிரமுகா் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



