தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மே 2026, 2:24 am IST

தூத்துக்குடி மாவட்ட தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்கம், திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்மண்டல மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாநில துணைச் செயலா் போ்சில் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டு, கண் பரிசோதனை நடத்தி, ஆலோசனைகள் வழங்கினா். இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கத்தின் சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் ஹொ்சோம் நவராஜ், ஒன்றியச் செயலா் ஐசக் ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.