தூத்துக்குடி மாவட்ட தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்கம், திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்மண்டல மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாநில துணைச் செயலா் போ்சில் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டு, கண் பரிசோதனை நடத்தி, ஆலோசனைகள் வழங்கினா். இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
சங்கத்தின் சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் ஹொ்சோம் நவராஜ், ஒன்றியச் செயலா் ஐசக் ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










