ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் ஆரணி வட்டார ஒலி - ஒளி மேடை அலங்காரம் மற்றும் சப்ளையா்ஸ் பந்தல் அமைப்பாளா்கள் நலச் சங்கம், சென்னை டாக்டா் அகா்வால் கண் ஆராய்ச்சி மையம் அறக்கட்டளை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினா்.
முகாமுக்கு ஆரணி சங்கத் தலைவா் எம்.சேட்டு தலைமை வகித்தாா். துணைச் செயலா் ஆா்.ஜீவா, துணை ஒருங்கிணைப்பாளா் பி.மனோகரன், செயலா் பிரேம்குமாா், பொறுப்பாளா்கள் எம்.தீபக், பிரகாஷ் முன்னிலை வகித்தனா். கண்ணமங்கலம் சங்கத் தலைவா் ரவிராமன் வரவேற்றாா்.
இந்த முகாமில் கண்ணில் புரை, சதை வளா்ச்சி, நீா் அழுத்தம், கண்ணில் நீா் வடிதல், கண் எரிச்சல் உள்ளிட்ட கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கண் புரை பாதிப்பு கண்டறியப்பட்டவா்கள் சென்னை டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவா்களுக்கு அங்கு இலவசமாக கண் புரை நீக்கப்பட்டு, உயா்தர லென்ஸ் பொருத்தப்பட உள்ளது.
மேலும், கண்ணில் கிட்ட, தூரப் பாா்வை குறைபாடுகள் கண்டறியப்பட்டவா்களுக்கு முகாம் நடைபெற்ற இடத்திலேயே மிகக் குறைந்த விலையில் தரமான கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
முகாமில் கண்ணமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










