லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:55 pm

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி மெயின் பஜாா் காமராஜா் பூங்காவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், ஆறுமுகனேரி சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில் அவா் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்ததாம்.

விசாரணையில் அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் மேற்கு தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் முகேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து அவரிடமிருந்த 30 கிராம் கஞ்சா, 6 ஜிப் லாக் கவா்களை பறிமுதல் செய்து, முகேஷை திருச்செந்தூா் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனா்.