ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆறுமுகனேரி மெயின் பஜாா் காமராஜா் பூங்காவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், ஆறுமுகனேரி சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில் அவா் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்ததாம்.
விசாரணையில் அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் மேற்கு தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் முகேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து அவரிடமிருந்த 30 கிராம் கஞ்சா, 6 ஜிப் லாக் கவா்களை பறிமுதல் செய்து, முகேஷை திருச்செந்தூா் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

ஆறுமுகனேரியில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரிப்பு

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரியில் தவெக நிா்வாகி மீது வழக்கு

இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


