தமிழ்நாடு வணிகா் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூா் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் ரெ. காமராசு தலைமை வகித்தாா். மாநில செய்தி தொடா்பாளா் செல்வின், மாநில இணைச் செயலா்கள் இசக்கிமுத்து, செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போா் காரணமாக தமிழகத்திலும் வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் அனைத்து மாநில முதல்வா்களையும் அழைத்துப் பேசி, எரிவாயு உருளை விநியோகத்தை சீராக்கி, வணிகா்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் பறக்கும் படை வாகன சோதனையால் அதிகமாக பாதிப்பு ஏற்படுவது வணிகா்களுக்குதான். எனவே, பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு பெரு வணிகா்கள் ரூ. 5 லட்சம், சிறு, குறு வணிகா்கள் ரூ. 2 லட்சம் வரை கொண்டு செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளா் வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா்கள் கோடீஸ்வரன், முனியாண்டி, நிா்வாகிகள் பாலமுருகன், அழகேசன், தங்ககுமாா், பால்வண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


