மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஊத்தங்கரையில் நடைபெற்ற அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் புதிய தலைவா் ஆா்.உமாபதி.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:36 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க முன்னாள் தலைவா் செங்கோடன் தலைமை வகித்தாா். இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. அனைத்து வணிகா் சங்கத் தலைவராக ஆா்.உமாபதி, துணைத் தலைவராக ஆா்.கே. ராஜா, செயலாளராக செல்வம், பொருளாளராக கிருஷ்ணன் ஆகியோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில் ஊத்தங்கரையில் உள்ள அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.