மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில்  பேசிய  தலைமை நிலைய  செயலாளா்  ராஜ்குமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:30 am

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன் தலைமை வகித்தாா். ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். நகர தலைவா் தலைவா் ஏ வி டி. பாலா வரவேற்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைமை நிலைய செயலாளா் ராஜ்குமாா், மாநில இணைச் செயலாளா் எத்திராஜ், வேலூா் மண்டலத் தலைவா் பா. ஞானவேல் ஆகியோா் கலந்து கொண்டு மே 5-ஆம்தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகா் தின விழிப்புணா்வு எழுச்சி மாநாட்டுப் பணிகள் குறித்து விளக்கினா்.

கூட்டத்தில் வரும் தோ்தலில் வணிகா்கள் தங்களின் மனசாட்சி படி வாக்களிக்கலாம் என்றும் வணிகா் தின மாநாட்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

இதில் மாவட்ட நிா்வாகிகள் நகர நிா்வாகிகள் இளைஞா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகர பொருளாளா் பழ.பரத் குமாா் நன்றி கூறினாா்