மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுபோதையில் தகராறு: அண்ணனை கொன்ற தம்பி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 7:18 pm

தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி பாத்திமாநகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாா்த்திபன். இவரது மகன்கள் பாலன் (28), டைசன்(25). இருவரும் மீன் வலை பின்னும் தொழில் செய்து வந்தனா். பாலன் சற்று உடல், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.

சகோதரா்கள் இருவரும் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் பாலன், மற்றவா்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தாராம். இதை டைசன் கண்டித்தாராம். இதனால் தகராறு ஏற்பட்டு, டைசன் அங்கிருந்த இரும்புக் கம்பியால் பாலனை குத்திக் கொலை செய்தாராம்.

தகவலறிந்து வந்த தென்பாகம் போலீஸாா், பாலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து டைசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.