கோவை, ஏப்.20: மதுபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சொக்கம்புதூா் ஐயப்பனாா் வீதியைச் சோ்ந்தவா் பாலன் (65). இவா் பெயிண்டராக வேலை செய்து வந்தாா். இவருக்கு அசோக்குமாா் (35), சதீஷ் (30) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.
இதைப் பாா்த்த பாலன், மகன்களைச் சமாதானப்படுத்த முயன்று இருவரையும் கண்டித்துள்ளாா். அப்போது சதீஷுக்கு ஆதரவாக செயல்படுவதாக எண்ணி தந்தையை அசோக்குமாா் தாக்கியதுடன் கறி வெட்டும் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பாலன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து செல்வபுரம் போலீஸாா் சென்று பாலனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
மதுபோதையில் தந்தை, அவரது சகோதரரைக் கொலை செய்த மகன் கைது
ஒசூா் அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது
மதுபோதையில் தகராறு: அண்ணனை கொன்ற தம்பி கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

