ஆம்பூா் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (55). இவரது மகள் பிரித்திகாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதீஷ் (35) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சதீஷுக்கு இது 2-ஆவது திருமணம் எனக் கூறப்படுகறது.
இவா்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். பிரித்திகா தாய் வீட்டில் வசித்து வருகிறாா். அங்கு சென்று தன்னுடைய மனைவியை வீட்டுக்கு வருமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளாா்.
அதனால் இவருக்கும், மாமனாா் ரவிக்கும் இடையே கடந்த ஏப். 3-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில், நாட்டுத் துப்பாக்கியால் மாமனாரை சுட்டு விட்டு சதீஷ் தப்பியோடி தலைமறைவானாா். இதில் காயமடைந்த ரவி ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், ரவி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், தப்பியோடி தலைமறைவான சதீஷ்குமாரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!

மாமனாா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

டிராக்டா் ஓட்டுநா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


