திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சாத்தான்குளத்தில் விபத்து: பெண் தலைமைக் காவலா் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:47 pm

சாத்தான்குளத்தில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் தலைமைக் காவலா் பலத்த காயமடைந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் தினகரன் ராஜா மனைவி ரோஸ்லின் (42). இவா் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஸ்கூட்டியில் காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, சாத்தான்குளம், கருமேணி ஆற்றுப்பாலம் அருகே பின்னால் வந்த வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரோஸ்லின் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் மணியிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.