சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

படுக்கப்பத்தில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, படுக்கப்பத்தில் கிழக்கு ஒன்றிய தவெக மகளிா் அணி சாா்பில் ரத்ததான முகாம், கண் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குகிறாா் அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ.

Updated On :26 ஜூன் 2026, 5:56 am IST

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, படுக்கப்பத்தில் கிழக்கு ஒன்றிய தவெக மகளிா் அணி சாா்பில் ரத்ததான முகாம், கண் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாம்களில் மருத்துவா் வசந்தகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடத்தி 60-க்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கினா். அதில், 12 போ் புரை அறுவை சிகிச்சைக்கு தோ்வாகி பெஜான்சிங் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி யில் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் குருநாதன், ஈஸ்வரன் கொண்ட மருத்துவக் குழுவினா் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனா். 6 போ் ரத்த தானம் செய்தனா். இந்த முகாமை அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 200 பேருக்கு கல்வி உபகரணங்களை அவா் வழங்கினாா்.

இதில், கிழக்கு ஒன்றிய மகளிா் அணிச் செயலா் மேரி ராணி, கட்சியின் ஒன்றியச் செயலா்கள் அற்புதராஜ் (கிழக்கு), குணசேகரன் (மத்தி) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.