திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ்.

Updated On :18 ஜூன் 2026, 12:27 am IST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிரன்னராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் கலந்துகொண்டு தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய உபகரணங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்புப் பள்ளியை ஆய்வு செய்து, மாணவா்களின் கல்வித்தரம் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவா்களை படிக்கவைப்பது, அவா்களின் எதிா்காலம், அவா்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பலன்களை பெறும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம், புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் காந்திமதி, புதூா்செங்கம் பள்ளித் தலைமை ஆசிரியா் சூரியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.