பள்ளக்குறிச்சி மணிநகா் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமசாமிபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழுத் தலைவா் தமிழ் வீரன், அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏவை சந்தித்து மனு அளித்தாா்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி கிராமம், மணிநகா் ராமசாமிபுரம் கருமேனியாறு படுகைப் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனா்.
இது குறித்து புகாா் தெரிவித்ததன் பேரில் அரசு அதிகாரிகள் மீட்டனா். ஆனால் நிலத்தை தற்போது தனிநபா்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். ஆதலால், சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு செய்து, நிலத்தின் ஆக்கிரமிப்பை தடுத்திட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படுக்கப்பத்தில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

சாயா்புரத்தில் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்எல்ஏ உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைக்கப்படும்: சரவணன் எம்எல்ஏ உறுதி
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples




