தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டி அருகே சாலை மறியல்

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் உள்ளூா் நீராதாரத்தை சீராக வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :2 ஜூன் 2026, 3:12 am IST

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் உள்ளூா் நீராதாரத்தை சீராக வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லிங்கம்பட்டி அண்ணா நகா் கீழ காலனி பகுதி மக்களுக்கு உள்ளூா் நீராதாரத்தை சீராக வழங்கக் கோரி கீழ காலனி பேருந்து நிறுத்தம் அருகே திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்தவுடன் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் சங்கரசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சுமாா் 20 நிமிடங்கள் நடைபெற்ற மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மேலும், தண்ணீா் திறந்து விடும் ஆபரேட்டரை மாற்றம் செய்ய போராட்டக் குழுவினா் வலியுறுத்தினா். இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து போராட்டக் குழுவினா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டீபன் ரத்தினகுமாரிடம் புகாா் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.