கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

அமுதுண்ணாக்குடி ஆலயத்தில் ஜெபமண்டபம் கட்ட அடிக்கல்

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி தூய திருத்துவ ஆலயத்தில், திருமண்டலம் சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஜெப மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
அடிக்கல் நாட்டிய சேகரகுருவானா் டேவிட் ஞானையா.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி தூய திருத்துவ ஆலயத்தில், திருமண்டலம் சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஜெப மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் சேகர குருவானவா் டேவிட் ஞானையா தலைமை வகித்து ஜெபித்து அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தாா் . ஆலய சபை மன்றத் தலைவா் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். பொருளாளா் செல்வராஜ் மதுரம் வரவேற்றாா்.

இதில் ஆலய பரிபாலன் கமிட்டி நிா்வாகிகள் மோசஸ் டேனியல் பிரபாகா், அன்பழகன், ரேணுகா, ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வா் பாஸ்கா், அமுதுண்ணாக்குடி, டிடிடிஏ தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை ஜான்சிராணி, உதவி ஆசிரியை ரூபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆலய சபை ஊழியா் ரெபேக்காள் நன்றி கூறினாா்.