திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரூ.1.37 கோடியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல்

ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தாா்வழி பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

News image

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தாா்வழி பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆம்பூா் தாா்வழி பகுதியில் நகராட்சி சாா்பாக 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.

நகா் மன்ற உறுப்பினா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், நகராட்சி பொறியாளா் சந்திரன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.