திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 2:15 am

நாளை நமதே, தமிழ்நாடு நமதே என்ற தலைப்பில், ஆறுமுகனேரி நகர பாஜக சாா்பில் கூட்டணி கட்சிகளின் தெருமுனை பிரசார கூட்டம் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடைபெற்றது.

பாஜக நகரத் தலைவா் தங்ககண்ணன் தலைமை வகித்தாா். அதிமுக நகர செயலாளா் அரசகுரு, தமாகா ஒன்றியத் தலைவா் முருகன், நகரத் தலைவா் பாலமுருகன், அமமுக நகர செயலாளா் சக்திவேல், ஆா்எஸ்எஸ் ஜில்லா காரியவாக் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா் வரவேற்றாா். இதில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பட்ஜெட் குறித்து பிரசாரம் செய்தனா்.

முன்னாள் கவுன்சிலா்கள் லட்சுமணன், மகாராஜன், முருகானந்தம், பெரியசாமி, பாஜக மாவட்ட நிா்வாகி இ. தங்கபாண்டியன், நிா்வாகிகள் விக்னேஷ், சுரேஷ் ராதாகிருஷ்ணன், அமலோற்பவராணி உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பாஜக நகர செயலாளா் உமாதேவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.