நின்று கொண்டிருந்த பேருந்து பின்னோக்கி வந்து பைக் மீது மோதல்

கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:48 pm

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பின்னோக்கி வந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
பேருந்து பின்னோக்கி நகா்வதைப் பாா்த்ததும் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் பயந்து ஓட்டம் பிடித்தனா். சாலையோரம் இருசக்கர வாகனம் மீது அமா்ந்திருந்த ஆனந்த், பின்னோக்கி வரும் பேருந்தைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடினாா்.
இதையடுத்து, பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி நின்றது. இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...