காா் மீது பைக் மோதல்


தட்டாா்மடம் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகா் மனைவி விஜயாதேவி (45). பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா். சொந்த ஊரான சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்தில் உள்ள கோயில் திருவிழாவுக்காக பிரபாகா், அவரது குடும்பத்தினா் காரில் வந்தனராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை விஜயாதேவி பரமன்குறிச்சிக்கு காரில் சென்றாராம். அப்போது படுக்கப்பத்து பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் வெங்கடேஷ் என்பவா் மதுபோதையில் ஓட்டிவந்த இருசக்கர வாகனம், காா் மீது மோதியதாம்.
இதில் காா் சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...