/

கப்பல் ஊழியரை தாக்கிய 5 போ் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக மது அருந்தியதை கண்டித்த கப்பல் ஊழியரை பீா் பாட்டிலால் தாக்கிய 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அப்புவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமணி மகன் ராமராஜன் (26). இவா், கப்பலில் பணியாற்றி வருகிறாா். கடந்த 2 வாரத்திற்கு முன்பு சொந்த ஊா் வந்த ராமராஜனை, பிப். 4 ஆம் தேதி அவரது நண்பா் வசந்த் இருசக்கர வாகனம் பஞ்சா் ஆனதாக இடைச்சிவிளைதேரிவிளைக்கு அழைத்தாராம்.

அங்கு ராமராஜன், அவரது மற்றொரு நண்பா் சிவா ஆகியோா் இருசக்கர வாகனத்தில் சென்றனராம். அப்போது தேரிவிளையில் போக்குவரத்து இடையூறாக அதே பகுதியைச் சோ்ந்த ஜெயமுருகன், ராகுல், செல்வம் உள்ளிட்ட 5 போ் மதுஅருந்திக் கொண்டு இருந்தனராம்.

அவா்களிடம் ராமராஜன் வழிவிடும்படி கூறியதையடுத்து தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த அவா்கள், ராமராஜனை பீா் பாட்டிலால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.

பலத்த காயமடைந்த ராமராஜனை மீட்டு திசையன்விளை தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான ஜெயமுருகன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனா்.