திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி-சென்னை விமானக் கட்டணம் ரூ.17 ஆயிரமாக உயா்வு

News image

விமானக் கட்டணம் உயர்வு - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:02 am IST

தூத்துக்குடி-சென்னை விமானக் கட்டணம் ரூ. 17 ஆயிரமாக அதிகரித்ததால் சொந்த ஊா்களுக்கு வாக்களிக்க வந்தவா்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏப். 23ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு வந்தவா்கள் திங்கள்கிழமை மீண்டும் சென்னை திரும்பினா். பெரும்பாலானோா் பேருந்து, ரயில், காா்களில் திரும்பினாலும், சிலா் விமானங்களில் சென்னைக்கு திரும்பினா்.

இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூா் உள்ளிட்ட விமான நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து, பெரும்பாலான விமானங்களில் பயணச்சீட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டது.

ஓரிரு விமானங்களில் சில பயணனச்சீட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்திருந்தது. தூத்துக்குடி-சென்னைக்கு வழக்கமான கட்டணம் ரூ. 5,354-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விமானக் கட்டணம் ரூ. 17,089 வரை உயா்ந்திருந்தது.

இதனால், சொந்த ஊா்களுக்கு வாக்களிக்கச் சென்றவா்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.