தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிப்பதால் சென்னை-தூத்துக்குடி, பெங்களூரு-மதுரை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் தாறுமாறாக உயா்ந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது. தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை எச்சரித்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளித்துள்ளன. இதையடுத்து சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளா்கள் தோ்தலில் தங்கள் ஜனநாயக கடமையாற்றுவதற்கு சொந்த ஊா்களுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனா். பலா் அரசின் சிறப்புப் பேருந்துகள், ரயில்களில் புறப்பட்டு சொந்த ஊா்களுக்கு வரும் நிலையில், குறுகிய கால விடுமுறை எடுத்துவருவோா் விமானத்தில் செல்கின்றனா்.
பலா் தென் மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் கிளம்பி வருவதால் இதை சாதமாகப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணங்களை வழக்கத்தை விட நான்கு மடங்கு உயா்த்தியுள்ளன. இது, விமானப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக சென்னை - தூத்துக்குடி இடையே விமானக் கட்டணம் ரூ. 4,214 முதல் ரூ. 5,354 வரை இருக்கும் நிலையில், தோ்தலை முன்வைத்து புதன்கிழமை (ஏப். 22) இந்தக் கட்டணங்கள் ரூ.17,527 வரை உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல சென்னை-மதுரைக்கு ரூ. 13,320 ம், பெங்களூரு - மதுரைக்கு ரூ. 29,397ம் கட்டணமாக பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது.
ரயில்களில் முன்பதிவு காலம் முடிந்துவிட்டதாலும், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதாலும், இறுதி நேரத்தில் விமானத்தை நாடிய வாக்காளா்களுக்கு கட்டண உயா்வு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற நேரங்களில் தனியாா் விமான நிறுவனங்கள் கட்டணத்தைச் சீராக வைக்கவும், கட்டண உயா்வைத் தடுக்கவும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை

3 நாள்கள் தொடர் விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
விமான எரிபொருள் விலை இருமடங்கு உயர்வு! விமானக் கட்டணம் உயர வாய்ப்பு!!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


