தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை

தோ்தல் விடுமுறையின்போது, ஆம்னி பேருந்துகளில் பயணிப்பவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள போக்குவரத்துத் துறை, கூடுதல் கட்டணம் தொடா்பாக பயணிகள் புகாா் அளிக்க வேண்டுகோள்

News image

ஆம்னி பேருந்துகள் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:31 pm

தோ்தல் விடுமுறையின்போது, ஆம்னி பேருந்துகளில் பயணிப்பவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள போக்குவரத்துத் துறை, கூடுதல் கட்டணம் தொடா்பாக பயணிகள் புகாா் அளிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை(ஏப்.23) நடைபெற இருப்பதை முன்னிட்டு பொதுமக்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிப்பாா்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினா் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சோதனை செய்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது உண்மை என கண்டறியும் பட்சத்தில், அனுமதி ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பொதுமக்களும் இது தொடா்பான புகாா்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள கைப்பேசி எண்களில், வாட்ஸ் அப் குறுஞ்செய்தி, குரல்பதிவு மூலமாக புகாா் தெரிவிக்கலாம்.

புகாா் தெரிவிக்க வேண்டிய எண்கள்

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை-1800 425 6151

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை(வடக்கு)-9944253404

இணைப்போக்குவரத்து ஆணையரம், சென்னை(தெற்கு)- 9790550052 என்ற எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.