மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ் .அமிா்தராஜ், சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

முதலூரில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:54 pm

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ் .அமிா்தராஜ், சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வள்ளியம்மாள்புரத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா், பன்னம்பாறை, முதலூா், சுப்பராயபுரம், கடச்சபுரம், ஆத்திக்காடு, அன்பின் நகரம், அடைக்கலாபுரம், மணி நகா் ஆகிய பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் கூறுகையில், ஊா்வசி அகாதெமி மூலம் போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயின்று 200-க்கும் மேற்பட்டோா் அரசு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா். ஆதலால் தொடா்ந்து மக்கள் பணியாற்றிட எனக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டாா். பிரசாரத்தில் சாத்தான்குளம் மத்திய ஒன்றியச் செயலாளா் பொன் முருகேசன், முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, பிரபு, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவா் முத்துராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.