மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மீன்பிடி தடைக்காலம் அமல்: விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை முதல் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:09 pm

தூத்துக்குடியில் புதன்கிழமை முதல் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின.

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 - ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தமிழக முழுவதும் கடலோர மாவட்டங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

இதையடுத்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற தருவைக்குளம் பகுதியைச் சோ்ந்த விசைப்படகுகள் புதன்கிழமை கரை திரும்பிய நிலையில், தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம், வேம்பாா் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமாா் 25,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

எனவே, தங்களுக்கு அரசு வழங்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயா்த்தி வழங்கவும், தடைக்காலத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தமிழக கடல் பகுதியில் நுழைந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைப்படகு மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.