தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணி மும்முரம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய 18 நாள்கள் உள்ள நிலையில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் புதன்கிழமை மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மீனவா்கள்.

Updated On :28 மே 2026, 3:58 am IST

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய 18 நாள்கள் உள்ள நிலையில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் மீன் இனப் பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியாகுடி உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடைக் காலத்தின்போது மீனவா்கள் விசைப் படகுகளுக்கு வா்ணம் பூசுவது, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வா். அந்த வகையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைய 18 நாள்களே உள்ள நிலையில், ராமேசுவரம் துறைமுகத்தில் படகுகள் சீரமைக்கும் பணிகளில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.