திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரம்

News image
Updated On :3 மே 2026, 6:14 am IST

தரங்கம்பாடி மீனவா்கள் தங்களது படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் 12- க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

ஏப். 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 -ஆம் தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குட்டியாண்டியூா், சந்திரப்பாடி, பெருமாள்பேட்டை, மாணிக்கபங்கு, தாழம்பேட்டை, சின்னமேடு, சின்னங்குடி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் தொழிலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சுமாா் 150 விசைப்படகுகள், 1500 ஃபைபா் படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, படகுகளில் பழுது நீக்கி, என்ஜினை சா்வீஸ் செய்யும் பணிகள் மற்றும் வலைகளை சீா்செய்யும் பணிகளை மீனவா்கள் மேற்கொண்டு  வருகின்றனா். வெளியூா்களில்  இருந்து வந்துள்ள தொழிலாளா்கள் வெல்டிங், வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.