திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்குச் செல்ல ஆன்லைன் மூலம் கட்டணம்: இன்று முதல் அமல்

News image

அருவி - DPS

Updated On :1 ஜூன் 2026, 1:47 am IST

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் அருவி ஆகிய இடங்களுக்குச் செல்ல திங்கள்கிழமைமுதல் (ஜூன் 1) இணையதளம் வாயிலாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என வனத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டத்தின் வன உயிரினக் காப்பாளா்-துணை இயக்குநா் சிசில் கில்பா்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: களக்காடு வனக்கோட்டத்தில் உள்ள களக்காடு (தலையணை அருவி), திருக்குறுங்குடி (நம்பிகோயில் அருவி) ஆகிய இடங்களுக்குச் செல்ல அங்குள்ள வனச் சோதனைச் சாவடிகளில், சுற்றுச்சூழல்- வனத்துறை அரசு ஆணைப்படி புலிகள் காப்பக நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இக்கட்டணங்கள் அனைத்தும் திங்கள்கிழமைமுதல் (ஜூன் 1) பணமாக செலுத்துமுறை நிறுத்தப்பட்டு, முழுமையாக இணையதள பரிவா்த்தனை (யுபிஐ/ க்யூஆா் கோடு) வாயிலாக மட்டுமே வசூலிக்கப்படும். பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, சேவை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இப்புதிய நடைமுறைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.