தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மலைப் பகுதியில் பலத்த மழை: களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

களக்காடு மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

News image

தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி பாய்ந்தோடும் தண்ணீா்.

Updated On :5 ஜூன் 2026, 12:23 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பக்தா்கள் கோயிலுக்குச் செல்லவும் வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் களக்காடு மலைப் பகுதியிலுள்ள தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்து, தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் அதிகளவில் பாய்ந்தோடுகிறது. இதனால், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பாா்வையிடவும் தடை விதிக்கப்படுவதாகவும், திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நம்பிகோயில் பகுதியில் சூழல் சுற்றுலாவுக்கும், மலைநம்பி கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கும் வியாழக்கிழமைமுதல் (ஜூன் 4) மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்படுவதாக, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் களக்காடு வனக்கோட்ட துணை இயக்குநா் சிசில் கில்பா்ட் தெரிவித்துள்ளாா்.

நீா்வரத்து குறைந்ததும் வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என, வனச் சரகா்கள் பிரபாகரன் (களக்காடு), யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி) ஆகியோா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.