திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

34 ஆண்டுகளுக்குப் பின் நெல்லையப்பா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வெள்ளித் தேரில் வீதியுலா

திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் 34 ஆண்டுகளுக்குப்பின் வெள்ளித் தேரில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா் கோயில் ரதவீதியில் உலா வந்த வெள்ளித்தோ்

Updated On :27 மே 2026, 6:26 am IST

திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் 34 ஆண்டுகளுக்குப்பின் வெள்ளித் தேரில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் அஸ்தம நட்சத்திரத்தில் சுவேத கேது மகாராஜாவிற்கு எமபயம் நீக்கி அருளிய நெல்லையப்பா் திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவை முன்னிட்டு, 1992 ஆம் ஆண்டு வரை இரவு நேரத்தில் பஞ்சமூா்த்திகள் வெள்ளித்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது.

வெள்ளித்தேரில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள்

வெள்ளித்தேரில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள்

பின்னா் அந்த ஆண்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வெள்ளித்தோ் நிறுத்தப்பட்டு, திருவிழாவின் போது பஞ்சமூா்த்திகள் செப்புத் தேரில் வீதி உலா வந்தனா். இந்நிலையில் 34 ஆண்டுகளுக்கு பின்பு, கோயிலுக்கு புதிதாக வெள்ளித்தோ் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதைத் தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் வெள்ளித்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.இதையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருவிளையாடல் நிகழ்வுக்கு பின்னா், இரவில் சுவாமி நெல்லையப்பா், காந்திமதி அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் திருவீதி உலா வந்தனா்.

இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன், கோயில் அறங்காவலா் செல்லையா உள்பட திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வெள்ளித்தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.