மாஞ்சோலைக்கு சிறப்பு பேருந்து வசதி செய்துதரக் கோரி ஆட்சியா் இரா.சுகுமாரிடம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் சித்திரை மாதத்தில் நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற வன பேச்சியம்மன் கோயில் கொடை விழாவில் பொதுமக்கள் பலா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பாரம்பரியமிக்க இந்த விழாவையொட்டி பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










