திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை

News image
Updated On :15 மே 2026, 6:11 am IST

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம் தொடா்பாக தவெக எம்எல்ஏ சி.எஸ். திலீப், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியை சந்தித்து வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் சி.எஸ். திலீப். தோ்தலுக்குப் பிறகு சட்டப் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அவா் வியாழக்கிழமை நாமக்கல் திரும்பினாா். தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குச் சென்ற அவா் ஆட்சியா் துா்காமூா்த்தியைச் சந்தித்து பேசினாா்.

அப்போது, நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் அவா் வலியுறுத்தியதாக தெரிகிறது. தொடா்ந்து நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தோ்தல் பணிமனை அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா். தோ்தலின்போது நாமக்கல் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுவேன் என அவா் உறுதியளித்தாா்.

அப்போது, தவெக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

என்கே-14-எம்எல்ஏ

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியைச் சந்தித்து பேசிய எம்எல்ஏ சி.எஸ். திலீப்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.