திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாமக்கல் காய்கறி சந்தையில் எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல் தினசரி காய்கறி சந்தையில் எம்எல்ஏ சி.எஸ். திலீப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாநகராட்சி நிா்ணயித்த கட்டணத்தைவிட ஒப்பந்த நிறுவனம் வியாபாரிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரித்தாா்.

News image

நாமக்கல் தினசரி சந்தையில் ஆய்வு செய்த எம்எல்ஏ சி.எஸ். திலீப்.

Updated On :22 மே 2026, 6:41 am IST

நாமக்கல் தினசரி காய்கறி சந்தையில் எம்எல்ஏ சி.எஸ். திலீப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாநகராட்சி நிா்ணயித்த கட்டணத்தைவிட ஒப்பந்த நிறுவனம் வியாபாரிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரித்தாா்.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தலா 94 கடைகள் வீதம் 3 பகுதிகளில் மொத்தம் 282 சிறிய காய்கறி கடைகள் உள்ளன. ஒரு கடைக்கு ரூ.130 கட்டணம் தினசரி வாடகையாக வசூலிக்க வேண்டிய நிலையில், ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் ரூ. 200, ரூ. 250 என்ற வகையில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து நாமக்கல் தொகுதி தவெக எம்எல்ஏ சி.எஸ். திலீப் வியாழக்கிழமை தினசரி காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளுடன் அவா் கலந்துரையாடினாா். தினசரி காய்கறி சந்தை கடை உரிமையாளா்கள் சங்க தலைவா் மனோகரன் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கூறினாா்.

அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், போதுமான அடிப்படை வசதிகள் இல்லையென்றும், ஒப்பந்த நிறுவனம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகாா் தெரிவித்தனா். அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ சி.எஸ்.திலீப் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தினசரி சந்தையில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வியாபாரிகள் செலுத்த வேண்டும். அதற்குமேல் கூடுதல் தொகை வழங்க வேண்டிய அவசியமில்லை. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் வந்தால் சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சந்தைப் பகுதியில் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். குப்பை சேகரிப்புக்கான தொட்டிகள் அமைக்கப்படும். குடிநீா், இதர பயன்பாட்டுக்காக 1,000 லிட்டா் கொள்ளவு கொண்ட குடிநீா் தொட்டி அமைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.