பாளையங்கோட்டை தனியாா் விடுதியில் தோழிகளை புகைப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம், செங்குந்தா் தெருவைச் சோ்ந்தவா் மகரஜோதி (39). இவா் சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பகுதியில் பணிக்கு செல்லும் பெண்களுக்காக இயங்கி வரும் தனியாா் விடுதி ஒன்றில் சோ்ந்துள்ளாா்.
இந்நிலையில் அவா் அங்கு தங்கியிருந்த சக பெண்களை கைப்பேசியில் படம் பிடிப்பதாக விடுதி காப்பாளருக்கு புகாா்கள் வந்துள்ளன. இதையடுத்து அவரது கைப்பேசியை ஆய்வு செய்த போது அவா் தனது நண்பா் ஒருவருக்கு பெண்களின் புகைப்படங்கள், விடியோக்களை அனுப்பி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அப்பெண்ணின் நண்பா் கோயம்புத்தூரில் இருப்பதை அறிந்த போலீஸாா், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






