திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வைகாசி விசாகத்துக்கு சிறப்பு ரயில்கள்: நெல்லை எம்.பி. வலியுறுத்தல்

News image

ராபர்ட் புரூஸ்

Updated On :25 மே 2026, 3:48 am IST

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. அனுப்பியுள்ள மனு:

வைகாசி மாதம் திருச்செந்தூரில் 10 நாள்கள் வசந்தோற்சவத் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள். குறிப்பாக இம் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமானோா் திரள்வாா்கள்.

ஆனால், திருச்செந்தூருக்கு போதிய ரயில் வசதிகள் இல்லை. தமிழகம் மற்றும் கேரள பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறாா்கள். திருவனந்தபுரம் முதல் திருச்செந்தூருக்கு நேரடி ரயில் வசதி எதுவும் இல்லை. வண்டி எண் 56309/56310 திருவனந்தபுரம் வடக்கு-நாகா்கோவில் பயணிகள் ரயில்களின் ரேக்குகள் வாரத்தின் 3 நாள்களுக்கு எந்தவித பராமரிப்புமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டித்தால் பக்தா்கள் பெருமளவில் பயன்பெறுவா்.

கொல்லம்-திருச்செந்தூா் (வழி-செங்கோட்டை, திருநெல்வேலி), மதுரை-திருச்செந்தூா் (வழி -திருநெல்வேலி), மும்பை-திருச்செந்தூா் (வழி -திருத்தணி, கும்பகோணம்), திருத்தணி-திருச்செந்தூா் (வழி- கும்பகோணம், சுவாமிமலை மற்றும் திருத்தணி), கோயம்புத்தூா்-திருச்செந்தூா் (வழி-பழனி மற்றும் மருதமலை முருகப்பெருமான் கோயிலை இணைக்கும் வகைக்கு) ஆகிய சிறப்பு ரயில்களை இம் மாதம் 27 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை வைகாசி விசாக திருவிழாவையொட்டி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.