தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாம்பரம் - சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரயில்கள்

சென்னை தாம்பரத்திலிருந்து மேற்கு வங்கத்திலுள்ள சந்திரகாச்சி நிலையத்துக்கு வரும் 26 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் கோடை கால சிறப்பு விரைவு ரயில்கள்

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:03 am IST

சென்னை தாம்பரத்திலிருந்து மேற்கு வங்கத்திலுள்ள சந்திரகாச்சி நிலையத்துக்கு வரும் 26 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் கோடை கால சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை தாம்பரத்திலிருந்து வரும் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஜூன் 2 ஆம் தேதி காலை 10.15 மணிக்குப் புறப்படும் சிறப்புவிரைவு ரயில்கள் (எண் 06075) மறுநாள் (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சி நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கத்தில் வரும் 27- ஆம் தேதி மற்றும் ஜூன் 3 ஆகிய நாள்களில் (புதன்கிழமைகள்) சந்திரகாச்சி நிலையத்திலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண் 06076) மூன்றாவது நாள் (வெள்ளிக்கிழமை) மே 29 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரம் நிலையத்தை வந்தடையும்.

நிற்கும் நிலையங்கள்: ரயில்கள் சென்னை எழும்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கல், விஜயவாடா உள்ளிட்ட 15 நிலையங்களில் நின்று செல்லும். ரயில்களுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (மே 22) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.