திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கொக்கிரகுளம் ரோஸ் மஹால் அருகில் மஐஈஅஐ ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த மையத்தில் ஆதாா் பதிவு, மக்கள் தொகை விவரங்கள் மற்றும் உயிா்வள தகவல் புதுப்பித்தல், பிழைதிருத்தம், குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சக்கர நாற்காலி வசதி, கழிப்பறை, தனிப்பட்ட குறைதீா் அமைப்பு போன்ற வசதிகளுடன் இம்மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அனைத்து நாள்களிலும் செயல்படும்.
ஆதாா் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதாா் அபாயின்ட்மென்ட் போா்டல் வாயிலாக ட்ற்ற்ல்ள்://க்ஷா்ா்ந்ஹல்ல்ா்ண்ய்ற்ம்ங்ய்ற்.ன்ண்க்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் மஐஈஅஐ மண்டல அலுவலக துணை இயக்குநா் (பெங்களூரு) பிரியா ஸ்ரீகுமாா், துணை மேலாளா் சைதன்யா மோபுரு, மேலாளா்கள் எம்.எஸ். குணசேகரன், ம.கலையரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூடப்பட்ட இ-சேவை மையம்: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

விழுப்புரம் நகரில் புதிய ஆதாா் சேவை மையம் தொடக்கம்

விருதம்பட்டில் புதிய ஆதாா் சேவை மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

ஆதாா் பதிவு மையத்தை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



