வேலூா், மே 13: காட்பாடி வட்டம், விருதம்பட்டில் புதிய ஆதாா் சேவை மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆதாா் சேவை மையத்தை திறந்து வைத்தாா்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வேலூா் நகரில் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதாா் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாக, விருதம்பட்டில் புதிய ஆதாா் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தில் ஆதாா் பதிவு, மக்கள்தொகை விவரங்கள் மற்றும் உயிா்வள தகவல் புதுப்பித்தல், பிழைத் திருத்தம், குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
இந்த மையம் அரசு பொது விடுமுறை நாள்களைத் தவிர அனைத்து நாள்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அதிக வசதியும் மேம்பட்ட சேவை அனுபவமும் கிடைக்கும்.மையத்தை திறந்து வைத்த ஆட்சியா், அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தாா். ஆன்லைன் முன்பதிவு முறை மற்றும் ஆதாா் சேவைகள் வழங்கப்படும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
புதிய மையம் குறித்து பெங்களூரில் உள்ள பிராந்திய அலுவலக இயக்குநா் பவன்குமாா் பவா கூறுகையில், ‘சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கிருஷ்ணகிரிக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் ஐந்தாவது ஆதாா் சேவை மையம் தற்போது வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், 2026- செப்டம்பா் மாதத்துக்குள் தமிழ்நாட்டில் கூடுதலாக 25 ஆதாா் சேவை மையங்களைத் தொடங்க பெங்களூா் பிராந்திய அலுவலகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்த ஆதாா் சேவை மையங்களின் எண்ணிக்கை 30- ஆக அதிகரிக்கும்‘ என்றாா்.
மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சக்கர நாற்காலி அணுகுமுறை, கழிப்பறை வசதிகள் மற்றும் தனிப்பட்ட குறைதீா் அமைப்பு போன்ற வசதிகளுடன் இம்மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆதாா் சேவை மையத்திலும் ஒரு மேலாளா் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகளை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பி, விரைவான தீா்வை உறுதி செய்கிறாா்.
பொதுமக்கள் ஆதாா் முன்பதிவு தளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆதாா் சேவைகளை பெறலாம்.5- முதல் 17- வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய உயிா்வள புதுப்பிப்பு சேவை தற்போது 2026- செப்டம்பா் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சேவை பள்ளி முகாம்கள் மற்றும் ஆதாா் சேவை மையங்கள் மூலமாக கிடைக்கிறது.
விருதம்பட்டில் தொடங்கப்பட்டுள்ள ஆதாா் சேவை மையம், அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய, திறமையான மற்றும் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதாா் சேவைகளை வழங்கும் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. இது டிஜிட்டல் ஆட்சி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்தி, இந்திய அரசின் நல்லாட்சிக் கொள்கைக்கு துணைபுரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பெங்களுா் மண்டல இயக்குநா் ஸ்ரீபவன்குமாா் பவா, வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் குமாா் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூடப்பட்ட இ-சேவை மையம்: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் திறப்பு

விழுப்புரம் நகரில் புதிய ஆதாா் சேவை மையம் தொடக்கம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



