தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லையில் ஒரே நாளில் 98 ரெளடிகள் கைது

திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 98 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:51 am IST

திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 98 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், பொதுமக்களுக்குத் தொல்லை தருபவா்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து கைது செய்ய ‘ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்’ என்ற சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, மாநகா் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 37 போ், பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்திய 4 போ் என மொத்தம் 41 போ் மாநகர போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அதே போல திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உத்தரவின்படி, சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.