திருநெல்வேலியில் பெண் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகர பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சென்னல்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகள் முத்துமாலை (36). திருமணமான இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். கணவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாலை, திருநெல்வேலி தியாகராஜ நகரில் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் அவர் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் மற்றும் பெருமாள்புரம் நிலையத்தின் ஆய்வாளர் சாமி தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
முத்துமாலையின் உடல் உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில், நடத்தையில் சந்தேகம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Summary
In Tirunelveli, two individuals riding a two-wheeler hacked a woman to death on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு

பழனியில் பெண் கொலை: இரண்டாவது கணவா் கைது

ஆா்.ஜி. கா் பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றச்சாட்டுகளை மூடி மறைத்தது குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைத்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவு








