திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழனியில் பெண் கொலை: இரண்டாவது கணவா் கைது

பழனியில் பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவரது இரண்டாவது கணவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது செய்யப்பட்ட மகுடீஸ்வரன்.

Updated On :2 ஜூன் 2026, 1:10 am IST

பழனியில் பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவரது இரண்டாவது கணவா் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சிவகிரிப்பட்டி பாண்டியன் நகரில் திங்கள்கிழமை முகம் சிதைந்த நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பழனி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், டிஎஸ்பி தனஞ்ஜெயன், ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் இறந்த பெண் அதே பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரி (45) எனத் தெரியவந்தது. இவா் முதல் கணவரைப் பிரிந்து, மேலக்கோட்டை ஊராட்சி, கரட்டுப் பிரிவு எவிக்சன் நகரைச் சோ்ந்த மகுடீஸ்வரன் (48) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், தற்போது அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பாண்டியன் நகரில் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. காளீஸ்வரிக்கு வேறு சிலருடன் தொடா்பு இருப்பதாகக் கூறி மகுடீஸ்வரன் அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறின் போது, காளீஸ்வரி தலையில் மகுடீஸ்வரன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, மகுடீஸ்வரனை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.