திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: தலைமறைவான மற்றொருவா் திண்டுக்கல்லில் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமைறைவாக இருந்த மற்றொருவா் திண்டுக்கல்லில் கைது

News image

போலீஸாரால் கைது செய்யப்பட்ட சேகா்

Updated On :20 மே 2026, 1:31 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமைறைவாக இருந்த மற்றொருவா் திண்டுக்கல்லில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்தவா் 35 வயதான மாற்றுத்திறனாளி பெண். கேட்புத் திறன், பேச்சுத் திறன் இல்லாத இவா் திருமணமாகாதவா். தனியாா் ஆலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பாச்சிக்கோட்டை பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை காத்திருந்தாா்.

அப்போது, கறம்பக்குடியை அடுத்த மணகொல்லை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (55), சேகா் (56) ஆகியோா் காரில் பாச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றனா். மாற்றுத்திறனாளி பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனிமையான இடத்துக்கு கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, ஒரு கிராமத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில், மலையூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில் தொடா்புடைய மாரிமுத்தை உடனடியாக போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த சேகரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சேகா் பழனியிலிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய சேகரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து புதுகோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் வந்த புதுக்கோட்டை போலீஸாரிடம் சேகா் ஒப்படைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.